கண்களுக்கு காய்ச்சல்

கண்களுக்கும் காய்ச்சல் கண்ணீர் மழையில் நனைந்ததால்,
உள்ளே உள்ள ரணங்களைப் புன்னகை கொண்டு மறைத்து விட்டேன்.
வெறும் சிரிப்பிற்கு என்ன காசா பணமா
உதிர்த்துவிட்டுப் போகிறேன்,
யாரும் கேட்க மாட்டார்கள் என் கண்ணீருக்கு காரணம் நீயா என்று.
துக்கங்களுக்கு இன்பம் என்ற சாயத்தை இட்டுவிட்டேன்,
மழை வந்தால் மட்டும்தான் பயம்
எங்கே சாயம் வெளுத்துவிடுமே என்று,
ஓயாத காதல் புயலில் தூசியும் அண்டாது
உன் இதயத்தை பாதுகாத்திருக்கிறேன்,
கண் மணிகளுக்கும் பொறாமையாய் தான் இருந்தது உனை காணும் போதெல்லாம்,
என் உயிரினும் மேலான உன்னை மகிழ்வுடனே விட்டுக்கொடுக்கிறேன்
உனது வாழ்வின் வளமைக்காக,
உன் வருங்கால மனைவியிடம் சொல் என் உயிரை பத்திரமாய் பார்த்து கொள்ள...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (29-May-17, 4:50 pm)
Tanglish : kankaluku kaaichal
பார்வை : 844

மேலே