வண்ண நிலவே

கருமுகில் கிழித்து ஒளிரும் நிலவே
கவிஞனின் கற்பனையில் சிறகடிக்கும் உறவே
ஏழையின் வாசலில் விளக்காய் வந்தாய்
குவளைப் பூக்களுக்கு மலர்ச்சியும் தந்தாய்
மங்கையின் முகத்திற்கு உவமை ஆனாய்
கங்கையின் அலையில் பயணம் போனாய்
நாணத்தில் ஒளிந்தாய் காதலில் தேய்ந்தாய்
பிறையாய் ஈசன் சிரம் சேர்ந்தாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (1-Jun-17, 2:48 pm)
Tanglish : vanna nilave
பார்வை : 1829

மேலே