ஓம் முருகா
(அ)மைதி ததும்பிடும்
மனம் கொடுத்திட்டு முருகா ..!!
(ஆ)சை கொன்ற
குணம் காட்டிட்டு முருகா..!!
(இ)டர் பல வந்த்தும் அது
தொடரா காத்தருளிடு முருகா ..!!
(ஈ)கை செய்யும்
எண்ணம் விதைத்திடு முருகா..!!
(உ)ள்ளம் எங்கும்
உன் நாமம் பாடவைத்திடு முருகா ..!!
(ஊ)னம் இல்லா
பணப்பை தந்திடு முருகா ..!!
(எ)ளிய வாழ்வு வாழ
நெறிதன்னை வகுத்திடு முருகா..!!
(ஏ)க்கம் சிறிதும் இல்லா
ஏற்றம் வைத்திடு முருகா ..!!
(ஐ)யமற்ற திடமான
நெஞ்சம் செய்திடு முருகா,..!!
(ஒ)ற்றுமை என்றும்
இறவா இதயம் இளைத்திடு முருகா..!!
(ஓ)ர் நொடிப்பொழுதும்
உன்னை மறவா மனம் படைத்திடு முருகா ..!!
(ஓள)வியம் பேசாது
இவ் நாவினை அடக்கிடு முருகா ..!!
உள்ளம் உருகி
உன்னை நித்தம் நினைத்து
கண்ணீரில் உனக்கு
செய்கிறேன் அபிஷேகம்
முருகா..!!
ஒருமுறையேனும்
உன் திருமுகம் காட்டி
உன் பார்வையால்
என் பாவங்களை வெட்டி
என்னை மனிதனாக்கிடு
முருகா ..!!
முத்துக்குமரா...!!
என்றும் உன் துதி பாடி
இவன்
என்றும் ..என்றென்றும் ..
ஜீவன்...🍁🍁