உயிரில் பூத்த உறவே 555
அன்பே...
பாசமான உன் பார்வையும்
ஒரு நொடியில் என்னை இழந்ததும்...
நம் காதலின் மூச்சி...
பனித்துளி விழும் ஓசையும்
என்னில் உன் மூச்சு காற்றும்...
என் வாழ்வின் ஆயுளை
அதிகரிக்க செய்யுதடி...
மலரின் மொட்டுக்கள்
வெடித்தால்கூட...
உன் சிணுங்கல் என்று
ஏமாந்து போகிறேனடி...
நான் பூவரசம் பூவில்
பீப்பி ஊதினால்...
என் இதழ்களில் நீ
எழுதிய காவியம் இனிக்குதடி...
எனக்கு தலைவலி வந்தால்கூட
துடித்துவிடுகிறாய் நீ...
என் வாழ்நாளெல்லாம்
என் தலையணை நீதானடி...
அன்பே உன்மடி வேண்டும்
என் இறுதி மூச்சும் தலைசாய்க்க.....