மலர்களே மலர்களே

மலர்களே மலர்களே
மணம் வீசி மனதை
கொல்லாதீர்கள்!

ஒருமுறை மலரும் நீயும்
ஒருத்தியை நினைத்து வாடும் நானும்
சாதி ஒன்றோ!
இல்லை இருவருக்கும் சமநீதி ஒன்றோ!!,

மலர்களே மலர்களே
மணமின்றி வாடாதீர்கள்

வாசம் இன்றி நீயும்
சுவாசம் இன்றி நானும்
வாழமுடியாது மலர்ந்து!
மறையப் போகிறோம் உதிர்ந்து!!

மலர்களே மலர்களே
முடிந்து விட்டது நாம் வாழ்ந்த காலம்
வந்துவிட்டது நாம் வாடப்போகும் காலம்
மலர்களே மலர்களே...
...................................................
....................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Jun-17, 7:10 pm)
Tanglish : malargale malargale
பார்வை : 315

மேலே