விடுமுறை நேர காலை உறக்கம்
அன்பாக எழுப்பிய அக்கா,
தட்டி எழுப்பிய தங்கை,
எச்சரிக்கை செய்த அப்பா,
எட்டி உதைத்த அம்மா.
இன்னும் எழும்பவில்லை.
பத்து பேர் அடித்து போட்டது போல்,
பத்து மணி வரை உறக்கம்.
என் முகத்தில் ஊற்ற வேண்டிய நீரை
முதுகில் ஊற்றிய அம்மா.
கோபத்துடன் பார்த்த அம்மாவிடம்
கொட்டாவி விட்டுக்கொண்டு கேட்ட முதல் கேள்வி
என்ன சாப்பாடு??