தந்தையர் தினம்

தந்தையர் தினம்

தந்தை என பெயர்சொல்லி அழைக்க
தன் உயிரைத் தாய் கொண்டு தீட்டிய ஓவியம்
தங்கமதைக் கைக்கொண்டு தீண்டுகையில்
தான் தாயாக மாறும் விந்தைதனை காண
காலமெல்லாம் தவமிருக்கும் உள்ளம் இது
உரிமையையும் உணர்வையும் கலந்து
ஊமையாகி உருகுகையில் அம்மகவு
அப்பா எனஅழைக்க அகமகிழும் தருணத்தில்
கண்மூடி மெய்மறந்து கண்ணீர் சுரக்கும்
உள்ளத்திற்கெல்லாம் நன்றி புகலும் நாளிதுவே

எழுதியவர் : கே என் ராம் (13-Jun-17, 9:59 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : thantaiyar thinam
பார்வை : 143

மேலே