உள்ளம் நிறைந்தவள்
ஹாய் சொல்லி வந்தாய்
அன்பாய் அரவணைத்து கொண்டாய்
உரிமைகள் எடுத்துக்கொண்டாய்
உயிர் வரை நட்பாகி போனாய்.....
உன் பேச்சின் நடையில்
சகோதரியின் பாசம் கண்டேன்.....
உயிர் பிரியும்
வரை உன் சகோதர
பாசம் நிலைக்க கேட்டேன்....
நீ வந்த வேளையிலே
பிறர் மீது கவனம் இல்லை....
விடை பெறும் வேளையிலே
என் பார்வை அது உன் வழி தடத்தின் மீது அன்றி வேறெங்குமில்லை.....
நீ கிடைத்தது வரம் அதற்காக
நானும் இருக்கவில்லை தவம்......
கடவுளிடம் வேண்டுதல்
பல அதில்
உனது நெருக்கம் தொடர வேண்டி சில......
உதட்டளவில் கொண்ட பாசம் சிலரிடம்
உள்ளம் நிறைந்த பாசம் மட்டுமே உன்னிடம்........