நித்திரையில்லா இரவுகள்
என் நித்திரை கொள்ளா இரவுகள் நீள்வதென்ன,
இமைப் பொழுதும் உன் நினைவுகள் எனை ஆள்வதென்ன...
இயற்கையின் உவமைகளாய் வந்தாய்,
உயிருக்குள் உமையாளாய் நின்றாய்,
உன் காதல் சிறையில் தப்பிக்க தோன்ற வில்லை -அடியே
என் இதய அறையில் உனக்கன்றி வேறு இடம் இல்லை...!