துணிவே துணையாகும்

வாழ்க்கை வழக்கன்று; விளக்கம் பெறுதற்கு
வெறுப்பில் வாழாதே! வெதும்பிச் சாகாதே!
தாழ்வு வரும்போது தளர்ந்துநீ போகாதே
தோல்வியைப் புறந்தள்ளு! புத்தெழுச்சி கொண்டெழு!

தாமரையின் தன்மையது சேற்றினால் மாறிடுமோ
சந்தனத்தின் வாசமது திரையிட்டால் போயிடுமோ
சோதனையின் விளிம்பில்தான் சாதனை பிறக்குமடா!
சிந்தனையை நேர்படுத்து; சிக்கல்கள் மறையுமடா!

வேதனை கடந்தவரே வாகை சூடிடுவார்
விலகி நின்றவரோ விரக்தியில் மூழ்கிடுவார்
போராடும் குணமிருந்தால் எதிர்ப்புகளும் சுகமாகும்
பகையெல்லாம் தூளாகும்; துணிவே துணையாகும்!

எழுதியவர் : குழலோன் (20-Jun-17, 7:23 pm)
பார்வை : 262

மேலே