உன் இதய ஓசையை எனக்கு கொடடி 555
ப்ரியமானவளே...
சாலையோரம் நீ
நடக்கும் போது...
உன்னை கேலி செய்பவர்களை
நீ கோபப்பார்வை பார்க்கிறாய்...
உன்னையே சுற்றி வரும்
என்னை ஏனடி...
சாதாரண பார்வைகூட இல்லாமல்
என்னை கொள்கிறாய் என்னை...
நீ கடக்கும்
போது மட்டும்...
உன் கொலுசின் ஓசை
அதிகமாக கேட்குதடி...
நான் உன்னை
மட்டும்தானடி பார்ப்பேன்...
உச்சிமுதல் பாதம்வரை
உன்னை ரசிப்பவன் நான்...
கொலுசோசை கேட்டால் உன்
பாதம் மட்டும் பார்ப்பேனடி...
உன் கொலுசின்
ஓசை போதும்...
உன் இதழ் ஓசைகள்
எப்போதடி திறப்பாய் எனக்கு.....