அமைதியடைவாய் மனமே

மூடநம்பிக்கையில் மூழ்கி மனங்களைக் கொலை செய்யும் கொலைகாரர்களே!
குருடனுக்கு வழியறிய உதவும் ஊன்றுக்கோல் போன்ற பகுத்தறிவைப் பற்றிக் கொள்ளுங்களே...

கூனனையும் நிமிரச் செய்யும் ஊன்றுக்கோலாய்,
பகுத்தறிவை முதுகெலும்பாக்கி வாழ்ந்திட வாருங்கள் சகோதரர்களே...

அன்பின் வழி, பகுத்தறிவின் வழியென்று உணர்ந்து அன்பைப் பற்றுங்கள் நண்பர்களே...

பொறாமை எண்ணத்தைப் போக்கி, இவனென்ன சொல்லுறது,
நாமென்ன கேட்கிறதென்ற சிறுமைக் குணம் விட்டு,
அன்பின் வழி சென்று,
பகுத்தறிவை அடையாளம் காணுங்கள் நண்பர்களே...

பட்டம், பதவி, அதிகாரமென கர்வம் கொண்டு, மரக்கிளையில் மாட்டிக்கொண்ட குரங்காய் தவிக்க வேண்டாம்...

மனிதத்தன்மையே இயற்கை.
மற்றதெல்லாம் செயற்கை.
என்பதை உணராது போனால் பூமியும் பாழாகுமே...

செங்குருதி மண்ணில் தொய்ந்து, செந்நிறம் விளங்க நாட்டுக்கு நாடு போர்...
காரணமென்ன வீட்டுக்கு வீடு நிலவும் நிலைமை...

எல்லாம் உங்கள் விருப்பந்தான்...
எதையும் நீங்கள் தேர்வு செய்யலாம்...

நெல்மணிகளாய் மினிக்கித் திரியும் பதர்களாய், இருந்துவிடாதீர்கள் நண்பர்களே...

அமைதியடைவாய் மனமே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Jun-17, 5:05 pm)
பார்வை : 458

மேலே