இடம்

மகனே!
கருவறையில்
இடம் கொடுத்த எனக்கு
சில்லறை வேண்டாம் !
ஜில் அறையும் வேண்டாம்!
உன்
இல்லத்தில் - ஓர்
இருட்டறை கொடு!
ஒருநாள் தங்கிவிட்டு
போகிறேன்!
கல்லறை - என்னை
கையசைத்து அழைப்பதற்குள்.

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (29-Jun-17, 1:51 pm)
Tanglish : idam
பார்வை : 65

மேலே