கிறுக்கியின் கிறுக்கல்கள் - 08

உன் விழிகளிடம்தான்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
எதுகை மோனையை
எதார்த்தமாய் பேச..!
*****
மது அருந்தும் பழக்கம்
இருக்கிறதா என்று நீ கேட்ட பிறகுதான்
அப்பழக்கத்தை நான் வழக்கமாக்கிக்கொண்டேன்
நான் உன் இதழ்களை சொன்னேன்..!
*****
என்னை பிடிக்குமா என நீ கேட்பது
கண்ணை பிடிக்குமா
என கலைஞனிடம் கேட்பதை
போலிருக்கிறது ..!
*****
ஈர்ப்பு விசையே
உன் வசம் தானிருக்கிறது
புவியீர்ப்பு விசையை பற்றி
என்னிடம் வினவுகிறாய் நீ..!
*****
ஏழு சுரங்களின்
நலன் கருதிதான்
சத்தமின்றி சிரிக்கிறாயா நீ??
*****
தேவதைகள் கொள்ளை அழகுடன்
வெள்ளைநிற உடையில்
இருப்பார்களென்றுதானே கேள்விப்பட்டேன்
நீயென்ன தினம் ஒரு நிறத்தில்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (1-Jul-17, 4:54 pm)
பார்வை : 217

மேலே