காதல் சாட்சி
அந்த முக சிரிப்பிற்கு மட்டும் ஏன்
அவ்வளவு எதிர்பார்ப்பு எனக்கு
சிறப்பாய் கொலை செய்கிறான்
அந்த சிரிப்பினில் மட்டும்
இதழோரம் ஈர்த்த புன்னகையால் ஏனோ
இன்னமும் நினைவு திரும்பவில்லை நான்
இயல்பாய் இதயத்தில் பதிந்து
ஏதோ இசைக்குது இவன் சிரிப்பு மட்டும்
அது கண்ணின் காட்சி பிழையா ?
இல்லை காதல் சாட்சி பிழையா ?
இவன் இதழில் எனக்கென மட்டும் தெரியுது
எழுதிவைத்த கவிதை எழுத முடியா நடையில்
வேக வேகமாய் விரிந்து ஒளிந்துகொள்ள தெரியாமல்
அழகைமட்டும் சிதறுது அவனது இளிப்பு...
அளவான தூரத்தில் அவனது சிரிப்பு
நிலையில்லாதவளாய் நிற்கவைத்துவிடுகிறது ..............................