உலகப்பர் மேல் நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா

உயரிய தர்மமென ஒப்பறிய கல்விக்கு,
சீர்மிகு கல்விக் கூடம் கண்டவர்கள்,
பெருமை மிகு இராமசந்திரபுரம் (கடியாபட்டி)
தீ.சொ.சொக்கலிங்கம் செட்டியார் குடும்பத்தார்.
அருமை காத்து அளப்பறிய செயலாய்,
தோற்றுவித்த பள்ளிக் கூடத்திற்கு இன்று
வயது நூறு.

சதம் காண்பது ஒரு சகாப்தம்.
சத்தியம் காத்திடும் வேள்வி.
அரிது,அரிது நூறாண்டு காண்பது அரிது,
பேராண்மைச் சிறப்பு.

எழுத்தறிவித்தல் அன்ன சத்திரம்
ஆயிரம் வைத்தலினும் மேலாம்.
பயின்றவர்கள் ஆயிரம், ஆயிரம்,
பயன் பெற்றோர் பல்லாயிரம்.
படித்தவர்கள் போற்றுவர்.
பார்த்தவர்கள் வியப்பர்.
காலம் கடந்தாலும் , நினைவுகள் மறக்காது.

உயர்வுகள் தனதாக்கி, உன்னதங்கள் மேலாக்கி,
வாழையடி வாழையென,நற் செயல்கள் தொடரட்டும்.
செய்து வரும் தர்மம் மென்மேலும் தொடர,
பள்ளியின் வளர்ச்சி என்நாளும் வளர,
தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியோடு,
உயர் கல்லூரிகளும் கண்டு சிறப்புறுதல் வேண்டும்.

மா மதுரைச் சொக்கரும், மங்கையவள் மரகத்து
மீனாட்சி தாயும் வந்தமர்ந்து காத்தருள வேண்டும்,
மனத்தகத்து மலர்ந்த எண்ணங்கள் கைகூடி வர வேண்டும்.
நீண்ட பெரு வாழ்வும் , நிலைத்த புகழும்,
நீங்காதிருத்தல் வேண்டும்.

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

எழுதியவர் : arsm1952 (7-Jul-17, 6:56 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 1353

மேலே