பூக்காலம்
பூத்திருக்கிறது
செடியெங்கிலும்
அழகின் புன்னகை
கிளைகிளையாய்த்
தாவிப் பூங்குவளையில்
மதுவருந்திய
வண்ணத்துப்பூச்சி
மயங்கியிருந்த
தருணமது
எட்டிப் பிடித்துவிடும்
கனவொன்றை
விரல்களில் பற்றியபடி
பூம்பாதம் பதித்து வந்த
குழந்தையின்
சினுங்கிய காற்கொலுசுக்குத்
தெரியுமா
அது போன்று
இன்னொரு பூக்காலம்
அமையாதென்பது ?...