மனிதம் வாழட்டும் மண்ணில்

உன்னுடைய உரிமை ...
உன் சுதந்திரம் ...
இன்னொருத்தரின் நிம்மதியை குலைப்பதாகி விடக் கூடாது ...

உன் மொழி உனக்கானது ...
அதை வேறொருவர் மீது திணிப்பது வன்மமானது .....

ஆங்கிலம் என்பது மொழியே தவிர அறிவல்ல...
யாரேனும் உன்னிடம் பீட்டர் விட்டால் பயப்படாதே .....
எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று தைரியமாக சொல் ...
தாய் மொழியை தெரியாமல் இருப்பது தான் அசிங்கம் ...

யாருடைய கண்ணீரிலும் புன்னகைத்திடாதே .....
யாவரையும் புன்னகை பூக்க செய் .....

இசைக்கு எல்லை இல்லை ஹிந்தியர்களே ...
நீங்கள் பார்த்த நிகழ்ச்சி நேற்று இன்று நாளை என்ற தமிழ் நிகழ்ச்சி ....
தமிழ் கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தமிழில் பாடினார் என்றால் எப்படி ?
உங்களின் மொழி வெறிக்கு ஒரு அளவே இல்லையா ....

இங்கே இருக்கும் காவி இந்து இந்தி வெறி இந்தியன் சொல்கிறான் ....
அவன் ஒரு தமிழன் அல்ல ....முஸ்லீம் என்று ....
அடச்சீ வாயா அது ....

இங்கே எந்த மதமும் கிடையாது .....
ரஹ்மான் அண்ணா என் அண்ணன்.....
தமிழன் .....
இங்கே தமிழ் தான் தோன்றியது .....
மதம் எல்லாம் நீங்கள் கொண்டு வந்தது .....

ரஹ்மான் அண்ணா தமிழ் பாட்டு மட்டும் பாடியில்ல ....
நிறைய ஹிந்தி பாடல் பாடி உள்ளார் ....
ஆங்கில பாடல்களும் பாடி உள்ளார் .....
இசையை இசையாக பாரும் ....
ஒரு நூறு பேர் கொண்ட மேடைக்கே அதுவும் எல்லை இல்லா இசைக்கே இப்படி உங்களுக்கு இருக்கிறதே ....
எங்களுக்கோ பல ஆயிரம் ஆண்டு பழமையான என்றும் செம்மையான எங்கள் தமிழை தமிழ்நாட்டில் ஹிந்தியை திணித்து அழிக்கும் வலியை அறிவீரோ ...............................................................................?????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நினைவில் கொள் இந்தியா ....
இது தமிழின் கூற்று .........

யோசித்து பார் .....
ஹிந்தி என்று சொல்கிறாயே .....உன் தாய் மொழி என்ன என்று தேடிப்பார் ........
நிச்சயம் ஹிந்தியாக இருக்காது .....அப்படி ஒரு மொழி ஆதியில் இருந்தால் தானே .......
நீ ஒரு குஜராத்தியாகவோ , மராத்தியாகவோ , பஞ்சாபியாகவோ இருப்பாய் .........

எத்தனை ஆண்டுகள் பழைமையானது ஹிந்தி ....
ஒரு 1000 1500 ஆண்டு இருக்குமா .......
இது பெருமைக்காக சொல்லவில்லை ....
எங்கள் வலிகளை சொல்கிறேன் ........

கடலுக்குள் எங்கள் இரண்டு சங்கங்கள் மூழ்கியது ....
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில் இன்று .....சொல்ல இயலவில்லை .....
எங்கள் அடையாளமே நீருக்குள் உறங்குகிறது ......
இன்று தான் இந்தியன் , சிங்களவன் , இந்தியா.இந்து ,முஸ்லீம் , கிருஸ்துவன் ,புத்தம் எல்லாம் ....
நாங்கள் எப்பொழுதும் தமிழர்கள் ....எங்கள் அடையாளம் தமிழ் ......................................................................................

நீங்கள் தான் இங்கே புதிதாக வந்தேறியவர்கள் .......
ஆனால் எங்களை அடக்கி ஆளப்பார்க்கிறீர் ......
இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் .....இலங்கையின் சுதந்திரத்திற்காகவும் நாங்களும் தானே ரத்தம் சிந்தினோம் ......

நாடு இந்தியா என்று
நீங்கள் சொல்லி வைத்திருக்கும் வரையறைக்காக சொல்வதாகிறது......
மனதார சொல்கிறேன் என் தாய் நாடு தமிழ் நாடு .....
என் தாய் மொழி தமிழ் ......
எங்கள் மரம் பனை மரம் ......

இந்தியா ....வரலாறு இருக்கிறதா ......படியுங்கள் ......புரியும் .......
இந்தியா இலங்கை இல்லை ......
தமிழ்நாடு இலங்கை ......
காரணம் .....
நாங்கள் அங்கே தான் வாழ்கிறோம் ......
தமிழ்நாடும் இலங்கையும் பிரிந்ததும் அதே கடற்கோளால் தான் .................
எம் மூதாதையர் எல்லாம் நீரில் மரிக்க மீதி எஞ்சியிருந்த மண்ணில் மிஞ்சியவர்கள் நாங்கள் ......
நீரில் இருந்து மீட்கவில்லை அடையாளங்கள் ......
கீழடியில் மண் மூடியது எங்களின் அடையாளத்தின் மீது கொட்டியது ....
உலகில் முதலில் தோன்றியது தமிழன் என்று யாரும் அறியக்கூடாது என்று காய் நகர்த்துகிறீர் ....
தமிழனுக்கு மதம் இல்லை .....
தமிழ் கடவுள் முருகர் அழகு அவர் கருப்பு .......நீங்கள் அழகு என்றால் சிவப்பு என்று எண்ணுகிறீர் ....மிகத்தவறு ,....
அழகு என்பது நிறம் அல்ல ....குணம் ......
எப்படி அவர் கடவுள் என்றால் எங்கள் கடவுள் எல்லாம் எங்கள் மூதாதையர் ....
எங்கள் குலதெய்வங்கள் போல் .....

இந்து , முஸ்லீம் , கிருஸ்துவன் எப்படி வந்தது என்றால் ,....
ஆரியர் வரும் பொழுது கொண்டு வந்த சாயம் ......

நாங்கள் யாரையும் துன்புறுத்துவதில்லை ....
வந்தாரை வாழ வைத்தவர்கள் ....
சிங்களவனின் வரலாறும் இந்தியனை போல் தெரியும் .....
ஆனால் அவர்கள் எல்லாம் தெரிந்தும் .....
எங்களின் உயிர்களை கொன்று குவித்தது அநியாயம் ........
நாங்கள் எங்கள் மண்ணில் வாழும் உங்களை தொந்தரவு செய்யவில்லை .....
எங்கள் இடத்தில் வாழும் எங்களை தொந்தரவு செய்யாதீர் .....

இந்தியனே
உம் தாய் மொழிகளான குஜராத்தி ....மராத்தி, ராஜஸ்தானி .....ஐ அழித்துவிடாதே ......

கடவுளை வணங்குங்கள் ....
ஏன் காவிகளை வணங்குகிறீர் .....????????

யார் கடவுள் தெரியுமா ?
இயற்கை ....
அவள் தான் நமக்காக அனைத்தும் தந்தவள் ....
சுவாசம் தந்ததும் அவளே ....
பேச மொழி பிறந்ததும் அவளாலே ....
மொழி தான் ஒருவரின் அடையாளம் ....இன்று யாரோ புகுத்திய மத சாயல் அல்ல ....

இலங்கையும் தமிழ்நாடும் பிரிந்து இன்று எத்தனை நூற்றாண்டுகள் ஆகிறது என்று தெரியவில்லை ....
இருவரும் ஒருவரே ....எல்லைக்கோடால் பிரிந்து கிடக்கிறோம் ....
நாங்கள் எப்பொழுதும் எங்கள் தமிழ் தாயகத்திற்கு உண்மையாக இருப்போம் .....

எம் சகோதரிகளான மலையாளம் , கன்னடம் , தெலுங்கு ...எப்பொழுதும் நன்றாக வாழ வேண்டும் .....
எம் தாயும் நானும் அதை தான் வேண்டுகிறோம் ......
ஏமாந்து விடாதீர்கள் இந்தியர்களால் என் மக்களே ....
நாம் திராவிடர் அல்ல ....தமிழர்கள் .....மலையாளி ......தெலுங்கர் .....கன்னடர் ......
நாம் எல்லோரும் தமிழ் தாயின் மைந்தர்கள் .....
நீங்கள் தமிழ் தாயின் மழலைகள் .....தமிழ் தோன்றல்கள் .....
உங்களின் சுதந்திரம் எங்களால் எப்பொழுதும் கெடாது .....
அதே போல் உமக்கு ஒன்று என்றால் முதல் குரல் உன் தாய் கொடுப்பாள் ......
இந்தியர்களால் மதச்சாயலோ , இந்து வெறியோ , கடவுளை விட சாமியாரையும் அவர் ஏற்றிருக்கும் அவாக்களை எல்லாம் பூசுவர் அவற்றை தூரமாக தூக்கி எறி....

நான் மிகப் பெருமையாக சொல்லிக்கொள்கிறேன் என் சகோதர சகோதரிக்கு தமிழ் பற்று அதிகம் ஈழத்தில் ....
ஈழத்திற்காய் இன்னுயிரை தந்த என் உடன்பிறப்புகளுக்கு காணிக்கையாகட்டும் தமிழீழம் .....
எமக்காக போராடி தான் நாம் எதையும் பெற்றோம் ....
நம் மொழி காக்க இன்னுயிர் தந்தவர்கள் ரத்தம் இந்த மண்ணில் உறைந்திருக்கிறது ....தமிழில் பேசுங்கள் ....
தமிழ் வாழ தமிழச்சி தமிழன் தமிழில் பேச வேண்டும் .....தமிழில் பேசுவது தான் சிறப்பு ....
அந்நிய மொழியில் பேசி கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும் என்பது வெட்டி பந்தா .
நமக்கு தாய் இருக்க நாம் ஏன் பிறர் தாயை நம் தாயாக ஏற்க வேண்டும் .
யாதும் ஊரே ....எந்த ஊரில் நீங்கள் இருந்தாலும் சொந்த மொழியில் தமிழ் சொந்தங்களோடு பேசுங்கள் .....
அந்நியருக்கு ஆங்கிலம் போதும் ...

உலகில் யார் அழுதாலும் அவர் கண்ணீரை துடைத்து விடுவோம் ....
அவர் இந்தியன் , தமிழன் , தெலுங்கன் , சிங்களவன் , வெள்ளையன் , அமெரிக்கன் ,புத்தம் , முஸ்லீம் , இந்து , மேலோன் , கீழோன் , பணக்காரன் எல்லாம் எமக்கு தேவை இல்லை ....
அவர்களும் ஒரு உயிர் .... மனிதன் .....
மனிதன் என்றல்ல ஒரு புல்லை கூட காப்பாற்றுவோம் ....அந்த புல்லிற்கு எவ்வளவு வலிக்கும் .....

இயற்கை தான் இறைவன் ....அதில் பிறந்தது தான் இசை .....அதில் பிறந்தது தான் மொழி .....
அது கொடுத்தது தான் இவ்வாழ்க்கை .....இவ்வுலகம் .....இயற்கையின் படைப்பில் ஏற்ற தாழ்வு இல்லை ....இங்கே எல்லா உயிரும் சமம் ....
புல்லும் மரமும் சமம் ....பூவும் காம்பும் சமம் .....ஆணும் பெண்ணும் சமம் ....
அதன் பிறகு கெட்ட மனங்கள் பிரித்ததே இந்த நிலைகள் ....இங்கே இருக்கும் வன்மங்கள் ......
யாருடைய பாதையிலும் குறுக்கிடாமல் அவர் அவர் பாதையில் சரியாக சென்றால் இங்கே சுரண்டல் இல்லை ....திணிப்பு இல்லை ....அழிவு இல்லை .....

மனிதம் வாழட்டும் மண்ணில் .....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Jul-17, 4:52 pm)
பார்வை : 786

மேலே