மனைவியாய் வருவாய் பெண்ணே

பெண்ணேநீ சிரித்தால் போதும்
.....பெண்களும் மயக்கம் கொள்வர்
கண்டபின் மயங்கி விட்டேன்
.....கன்னியுன் அழகில் நானும்
எண்ணமோர் கோடி வந்து
.....என்மனம் ஏங்கி நிற்க
பண்ணிலே காதல் வைத்து
.....பைங்கிளி உன்னைப் பாடுவேன்

கனவிலே நான் கண்ட
.....காட்சிகள் எல்லாம் இன்று
நனவிலே நடக்க வேண்டும்
.....நானுனை மணக்க வேண்டும்
மனதிலே இருப்ப தெல்லாம்
..... மங்கையுன் முகமே; நீயென்
மனநிலை அறிவாய் பெண்ணே
.....மனைவியாய் வருவாய் பெண்ணே

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:33 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 108

மேலே