காதல்- பகல் கனவு

எத்தனையோ பெண்களை நான்
தினம் தினம் கண்டதுண்டு
அவர்களில் பற்பலரும் பெரும்
அழகிகள் என்று கூட நான் கூறுவேன்
அவர்கள் எல்லோரும் ஆனால்
என் கண்களுக்கு வெறும்
ஓடும் மேகங்கள் ............
' அழகிய பொருட்கள் மனதிற்கு
இதம் தருபவை' அத்தனைதான்
அத்துடன் நிற்பவையே என்னைப்பொறுத்தவரை,

என் கண்கள் தேடுவதோ அவளை
அந்த என்னவளை ,என்னவள் என்று
என் மனது சொன்னவளை -அவளோ
என்னருகே இருந்தாலும் என்னை
அவள் கடைக்கண்ணால் இன்னும்
பார்க்கவில்லை ....சரி சரி
இன்று பார்க்கவில்லை என்றாலும்
என்றாவது ஒரு நாள் அவள்
பார்வை என் மேல் விழுந்து
என்னை விழுங்கி அப்படியே
அவள் மனதில் புகுந்துவிடும்
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்
பயணித்து கொண்டிருந்த பேரூந்து
ஓடிய வேகத்தில் மெல்ல துயில் வந்து
என் கண்களை தழுவிட ............

ஆஹா , நான் என்ன தவம் செய்தேனோ
தெரியவில்லை அந்த என்னவள்
என் கண்களில் நிற்பவள் என்னருகே
இருந்தும் தன கண்களால் என்னை
பார்த்திடாதவள்.............இதோ,
என்னை இப்போது பார்க்க
கண்களால் என்னை கிட்டே அழைத்திட
தயங்கி தயங்கி நான் அவள் அருகே சென்று
நின்றிட அவள் தன் அழகிய கரங்களால்
முத்துச்சிரிப்போடு என்னை இறுக
அணைத்துக்கொண்டு கன்னங்களில்
முது மழைப் பொழிந்தாள் .....என் மனம்
இன்பத்தின் எல்லைக்கு என்னை
அழைத்து செல்வதை கண்டு நானே
ரசிக்கையில் ........................

ரைட், ரைட் ..............சார் ...........
அடுத்த ஸ்டாப் கடைசி ஸ்டாப்.
என்று கூவி விசில் ஒன்று காதில்
விழ..... என் கனவும் கலைந்தது

நான் பேரூந்தில்....என் பயணம் முடிய
எழுந்தேன்...கனவு கலைய
உணர்ந்தேன் அது ஒரு வெறும்
பகற் கனவுதான் என்று ...............
சில கனவுகள் பலிக்கும் என்பார்
என் பகர்க் கனவு பலித்திடுமோ ?
........................................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jul-17, 9:26 pm)
பார்வை : 135

மேலே