மூன்றாம் பிறை
நிலவே மூன்றாம் பிறையாய் நீ
வானில் வலம் வரும் போதெல்லாம்
உன்னில் ஒரு கீறலாய்த்தான் தோன்றுகின்றாய்
இருந்தாலும் இந்த உந்தன் தோற்றம் என்
மனதிற்கு பெரும் இன்பம் தருகின்றது ஏனெனில்
இதில் உன் மாசு ஏதும் இல்லை நீ இப்போது
மாசிலா நிலவு அந்த ஆதி சிவன் சிரசில்
ஏற்றுக்கொண்ட பிறை நிலா அல்லவோ நீ