காதல் கணவனே!

இன்று காதலனாய் இருக்கும்
என் நாளைய கணவனுக்கு..

தினமும்
அவனுக்கு முன் எழுந்து
அவன் தூங்கும் அழகை ரசிக்க
ஆசை!

தினமும் மலர் சூடி
என் நெற்றியில்
அவன் இதழ் சேர்க்க ஆசை!

அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவன் என் இடைக்கில்ல ஆசை!

யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில்
அவனை நனைக்க ஆசை!

குழந்தையாய் அவன் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை!

யாரும் இல்லா சாலையில் அவன்
கைபிடித்து நடக்க ஆசை!

முதன் முதலில் அவன் வாங்கும்
வாகனத்தில் அவனோடு வெகுதுரம்
செல்ல ஆசை!

மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவனுடன் இருக்க ஆசை!

மழையில் நனைந்த அவன் தலையை
என் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை!

அவன் உயிர் சுமக்கும் என்னை
அன்று அவன் கண்ணுக்குள் வைத்து
பார்க்க ஆசை!

அவன் உயிர் பிறந்த பின்பும்
அவன் முகம் முதல் பார்க்க ஆசை!

இப்படியே 60 ஆண்டு காலம்
அவனோடு நான் வாழ
ஆசை!

60 ஆன பின்பும் அவன் முகத்தில்
விழுந்த ரேகையையும்
கன்னத்தில் விழுந்த குழியையும்
மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க ஆசை!

உயிர் பிரியும் வேலையில்
அவன் முகம் பார்த்து
அவன் மடியில் உயிர் பிரிய ஆசை..!!

எழுதியவர் : கன்னிகா (20-Jul-17, 1:10 pm)
சேர்த்தது : கன்னிகா
பார்வை : 119

மேலே