இதயங்களில் எழுதுது காதல் -கங்கைமணி

காதல்.கடிதம் எழுதுது,அதை
ஒவ்வொரு இதயமும் விரும்புது.
கனவிலும்கூட தொடருது
இரு இமைகளும் பிரிய மறுக்குது.

காற்றினும் மெல்லிய உணர்வது
காதலர் மனதினில் கனப்பது
கண்விழி வழிகளில் வரும் அது
காயங்கள் கொடுத்ததை ஆற்றுது.

கடிதமும் உயிலென மாறுது ,அதை
உயிரினும் மேலென மாற்றுது
உரியவரிடம் அதை சேர்க்குது
உயர்வாழ்வினை அளித்ததை வாழ்த்துது.

காதலர் கரங்களில் சேர்ந்தது
கைகளில் சேய் யென தவளுது
மறுபடி குழந்தையாய் வளருது
சிறு குடும்பத்தை கோயிலாய் மாற்றுது.

முதுமையின் முனங்களில் வாழுது
இளமையின் நினைவுகள் தேற்றுது.
முடிவினில் உயிர்களும் பிரியிது,மண்
மடியினில் உடல்களும் மடியிது.

திரும்பவும் காதலும் எழுதுது
மனங்களும் வாசலை திறக்குது.
மலர்களும் தேன்துளி சுரக்குது
மறுபடியும் அது இனிக்கிது!!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (21-Jul-17, 2:16 pm)
பார்வை : 184

மேலே