கலகம் இல்லா உலகம்

=========================.
நாவுகளில் ஆனந்தம் தடவிய
நனிசிறந்த வார்த்தைகளில் குளிக்கும்
செவிகளின் வழியே இதயத்துள் நுழையும்
இன்பத்தேன் ஆறு வாய்ப்பதற்கான
குழந்தை மனதோடு வாழ்ந்துவிடு.

ஆயுதம் செய்வதற்கும் கூட
அன்புமிக்கவர்களின் ஒத்துழைப்பு
சாத்தியமாகின்றபோது
ஆயுதமெதற்கு?
அன்பு செய்.

ஒரு தேசத்தை அழிக்க
அணுவாயுதம் செய்யும் நேரத்த்திற்கு
குறைவான நேரத்தில்
நீ அன்பு செய்துவிடலாம்.

அன்பு செய்ய வேண்டும் என்று
மதங்களின் வாயிலாகப் புகட்டியவர்கள்
நோக்கத்திற்கு தீ வைத்து எரித்தே
மதங்களின் பெயரில் சண்டைக்கு
வழி செய்து வைக்கிறோம்.

மதங்களின் மூலமான அன்பு வேண்டாம்
மனங்களின் மூலமான அன்பு போதும்.
வார்த்தை அணுகுண்டு வெடித்து
பலியான இவ்வுலகம் நாளை
கலகம் இல்லாத உலகமாகுமே!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-Jul-17, 9:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 94

மேலே