நகைச்சுவை

ஒரு அழகிய கிராமம். அதில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன், ஒரு பிச்சைக்காரன் அல்லது வழியில் தனக்கு சாப்பாடுக்கு வழியில்லை என்று கூறுபவர்கள். இப்படி யாரையாவது  ஒருவரை சாப்பாட்டுக்கு அழைத்து வந்து விடுவான். இப்படி அவன் பல நாட்களாக தன்னோடு வீட்டுக்கு சாப்பிட அழைத்து வருவான் வந்தவர் சாப்பிடுவதால் இவருக்கு சாப்பாடு இருக்காது. இவர் சாப்பாட்டை கடையில் சென்று சாப்பிடுவார். இப்படி பல மாதங்கள் சென்றது.  சுற்றுப்புறம் எல்லாம் அவரை மிகவும் சிறப்பாக பேசினார்கள். ஒருநாள் ஒருவர் அவரிடம் மிகவும் மரியாதையாக தாங்கள் செயல் கண்டு மிகவும் மகிழ்வுடன் இருப்பதாக கூறினார், பிறகு தாங்கள் இப்படி நடப்பதற்கு என்ன காரணம். அதற்கு அவன் வேற என்னங்க பண்ணுறது எங்க வீட்டு சாப்பாட்டில் இருந்து தப்பிக்க எனக்கு வேறு வழியில்லை என்று மிகவும் பரிதாபமாக கூறினான்....

எழுதியவர் : பிரபுதேவா. சுபா (27-Jul-17, 7:19 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 422

சிறந்த நகைச்சுவைகள்

மேலே