உயிருக்கு பிறந்தநாள்

இரவுகளே இரவுகளே
இன்று ஒருநாள் மட்டும்
நீங்கள் முடியாமல்
தொடருங்கள்!
இமைமூடி என் இனியவள்
உறங்கும் அழகினை
நான் உறங்காமல்
காண வேண்டும்!!,

விடியல்களே விடியல்களே
இன்று ஒருநாள் மட்டும்
விடியாமல் விடுமுறை
எடுத்துக்கொள்ளுங்கள்!
என்னவள்
விழிதிறந்து பார்க்கும் வேளையில்
விண்ணுலகமே விந்தையாக
மாறி இருக்க வேண்டும்!!,

மேகங்களே மேகங்களே
இன்று ஒருநாள் மட்டும்
பூமியை கடந்து செல்லுங்கள்!
மெத்தைமேல் உறங்கும்
இவள் உங்களைக் கண்டு
மெய்சிலிர்க்கட்டும்!!,

மழைச்சாரல்களே மழைச்சாரல்களே
இன்று ஒருநாள் மட்டும்
மறைந்து செல்லுங்கள்!
மழலை அவளின்
மை விழியோரம் நான்
விழாக்கோலம் காணவேண்டும்!!,

இயற்கைகளே இயற்கைகளே
இன்று ஒருநாள் மட்டும்
இயங்காமல் இருங்கள்!
என் இதயமவள் இன்று
இதயம் இறங்கி
உங்களை வாழ்த்துவாள்!!,

மலர்களே மலர்களே
இன்று ஒருநாள் மட்டும்
மனம் இறங்கி
வேண்டுங்கள்
மணம் வேண்டும் என்று!
மணத்திற்க்கு சொந்தக்காரியான
என் மங்கை ஏற்றுக்கொள்வாள்
உங்களை உறவுகளாக!!,

இனியொரு அதிசயமென்ற
இயற்கை எழிலின்
உடன் பிறப்பே
பிரியனின் பிரியமானவளே
பிறைநிலவென நீ
இல்லாமல்
பௌவுர்ணமியாக ஒளிவீச வேன்டும்
என்றென்றும்!
அதற்க்காக வாழ்த்துகின்றேனடி
உயிரே
உன் பிறந்தநாள் நாளான
இன்றும்...!♥♡♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (28-Jul-17, 12:00 am)
பார்வை : 1687

மேலே