நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
என் தாய் மொழி தமிழில்
நான் கையால் எழுதும் பொழுது பிழை செய்ததில்லை செய்ய மாட்டேன் ...
என் தமிழ் தேர்வு தாளில் விரைவாக எழுதும் பொழுது ஒரு புள்ளியை தவறுதலாக வைத்து விட்டேன் என்றாலும் ...
என் இதயத்தில் நான் எழுதி கொண்டிருக்கும் எழுதுகோலால் என்னை குத்திக்கொல்லுங்கள்...
தவறு என்பது என்னால் என் தமிழுக்கும் தாயிற்கும் செய்ய முடியாது ...
என் தவறை சுட்டிக்காட்டு தாயே ...
அந்த தவறுக்கு இணையாக என் உயிரை தருவதே ஈடாகாது ...
தமிழ் என்னுடைய தாய் ...
அவளை பிழையாக்குவது
என் தாயை என் கையால் கொன்றதற்கு சமம் ...
என் தாயிற்கு நான்
நன்மை செய்யவில்லை என்றாலும்
தீமை செய்து விடக்கூடாது .
நெஞ்சு வலிக்கிறது தாயே ...
தமிழ் நாட்டில் தமிழை காக்க முடியா என் இயலாமையை நினைத்து ...
என் அடுத்த தலைமுறைக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பது எனக்கு வலியை ஒரு துளியும் தராது .....
என் தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவில்லை எனில் என்னை கொன்று விடு தாயே ...
உன் பாதத்தில் இறந்து என் பாவங்களை கழுவுகிறேன் ...
என் உதிரத்தில் வாழும் தாயே ...
இந்த மண்ணில் நான் வீழும் பொழுதும்
என் நெஞ்சில் உன்னை தாங்கிக்கொண்டு
உன்னை அணைத்தபடி இறப்பேன் தாயே ...
வாழ்க்கை வாழ்வதற்கே ...
மகிழ்ச்சி எங்கும் பூக்கிறது ...
தமிழ் எங்கும் நிறைந்திருக்கிறது ...
இறப்பை தேடி நீ போகாதே ...
வாழ்க்கையை வாழ் ...வானம் வசப்படும் ...
எண்ணம் வண்ணமாகும் ...
சொர்க்கம் உந்தன் பக்கமாகும் .....
தாயிற்கு மட்டும் எக்குறையையும் வைத்து விடாதே ...
உலகில் இரண்டு உண்டு ...குற்றம் கடிதல், குற்ற உணர்வு ...
அவை தரும் வலி குற்றம் கடிதல் - மெர்லின் அவர்களின் பாதத்தில் விழும் காட்சிகள்(சின்னஞ்சிறு கிளியே) தான் ...
தாயும் தாய் மொழியும் வேறில்லை .....
வாழ்க்கை வாழ்வதற்கே ...
நன்றாக வாழ் ...நல்ல மனிதனாக வாழ் ...
வாழ்க அனைத்து தாய் மொழியும் .....
தமிழில் பேச பெருமைப்பட்டு
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து ...
குறிப்பு :
விளம்பரத்திற்காக தமிழச்சி அல்ல ...
என் அடையாளம் தமிழச்சி ...
தமிழ் என் உயிருக்கும் மேல் ...
இமைப்பொழுதும் இறக்கும் பொழுதும் வாழ்க தமிழ் என்று சொல்லிய படியே இறப்பேன் ...
என் உயிரும் என் தமிழில் சேரட்டும் ...
எப்பொழுதும் சொல்கிறேன் ...
இப்பொழுதும் சொல்கிறேன் ...
சாவை நாம் தேடி போகக்கூடாது இளைஞர்களே ...
வாழ பிறந்திருக்கிறோம் ...
வாழ்ந்து பாருங்கள் ...வாழ்க்கையின் அருமை புரியும் ...
இப்படி ஒரு அழகான உலகை வாழ்க்கையை தந்த தாய் தந்தையை உண்மையாக நேசியுங்கள் ...
இவை எல்லாம் தந்த இயற்கையை நேசியுங்கள் ...இசையை ரசியுங்கள் ...
ஒன்று சொல்ல வேண்டுமானால் உன் உயிரை எடுக்கும் உரிமை உன்னிடம் இல்லை ...
கோழையாக வாழாமல் வீரனாக வாழ் ...
ஆதியும் அந்தமும் வரையறுக்கப்பட்டாயிற்று ...
இங்கே நாம் நவரசங்களையும் அனுபவிக்க வந்திருக்கும் பூவை போன்ற உயிர்கள் ...
அவை இறப்பதென்று அழுவதில்லை ...
பூவில் வண்டு தேனை குடிப்பதென்றும் கண்ணீர் சிந்துவதில்லை ...
நாளை விடியலில் நாளும் புன்னகையாய் பூக்கிறது .....
புன்னகை பூமி பூக்கட்டும் ...அகத்திலும் முகத்திலும் ...
நீயும் பூமியும் அழகாய் தெரியும் உனக்கு ,....
குறை இல்லா வாழ்க்கை இல்லை ...
அதில் நிறை ஆயிரம் இல்லாமல் இல்லை ...
நீ பார்க்கும் பார்வையை மாற்று ....
பாதை புலப்படும் ....
அதில் வாழ்க்கை ஆனந்தம் கொள்ளும் ...
இப்படி ஒரு வாழ்க்கை வாழ வில்லையே என்று பின்பு
ஏங்காமல் ...
உனக்கு பிடித்த வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு வாழ்ந்துவிடு ...
இறப்பு ஒன்றும் கண்ணீரும் அல்ல ...
வலி எல்லாம் வாழ்க்கையும் அல்ல ...
வாழ்க்கை தரும் அனுபவங்கள் யாவும் உண்டு ...
அதில் பிஞ்சு ...
காயாகி ...
கனியாகி ...
விளைந்து ...
விதைவதே வாழ்க்கை ...
இதில் துன்பமே இல்லை ...
அனைத்தும் நன்மையே ...
தடுக்கி விழுந்தால் மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்பதை வாழ்க்கை சொல்கின்றது உன்னிடம் ...
உன் அனுபவத்தையும் நினைவுகளையும் தருகிறது ...
சிறு வயதில் நான் இந்த இடத்தில் மிதி வண்டியை கீழே போட்டேன் தெரியுமா!...
இதில் வலி இருக்காது
அனுபவமே இருக்கும் ...
வாழ்க்கை இனிமையானது ...
அதில் உறவுகளும் நட்புகளும் அழகான உணர்வுகளானது ...
வாழ்க்கையின் வெளிப்பாடு சந்தோசமானது .....
இந்த பூமி அழகானது ...
இல்லையென்றால் இயற்கையும் ... இசையும் ...இருக்குமா என்ன ???...
இனிமையான வாழ்க்கை வாழ வாழ்த்துகள் ...
- உன்னால் முடியும் -