காதலி

வானம் பார்த்த பூமியிலே
வந்து பொழிந்த மழையை போல்
தேடி திரிந்த காதலியே
நேரில் வந்து நீ நின்றாய்...

முகில் கண்ட மயில் போல் - மனம்
உன் முகம் காண கூத்தாடுதே...

வெயில் கண்ட பனி போல் - மனம்
உன் விரல் தீண்ட கரைந்தோடுதே...

எனை ஈர்க்கும் உன் வருகை
இயற்கையின் அதிசயம்...

எனை சாய்க்கும் உன் புன்னகை ஈடில்லா ஆயுதம்...

அடி வயிற்றில் பூ மலரும்
அதிசயத்தை நானுணர்ந்தேன்

அடி பெண்ணே உனை காண
தினந்தோறும் தவமிருந்தேன்...

மழை தாங்கும் நிலம் போல
மார்போடு எனை ஏற்பாய்...

மரம் தரும் நிழல் போல
மரணம் வரை உடனிருப்பேன்...

எழுதியவர் : சுரேஷ் கிருஷ்ணா (2-Aug-17, 10:25 pm)
சேர்த்தது : சுரேஷ் கிருஷ்ணா90
Tanglish : kathali
பார்வை : 104

மேலே