காதலும் வலியும்

காதலும் வலியும்

மதிமனம் மாறா
மங்கையிடம்
என்மனதை பறிகொடுக்க

சிறுசிறு சேட்டையிலே
என்நெஞ்சை சிறைபிடித்தாள்

நித்தம் சிறு கவிதைபாடி
என்மனதை வெளிப்படுத்த
அவளை நானறியேன்

நாழிபல கடந்தும் பேசியதும்
தூக்கம் தொலைத்ததும்
ஓர் இனிமையிங்கே

கவலைகள் மறந்தோம்
கவிதைகள் பல பாடினோம்

உறவானவள் உள்ளம்
கடந்து உணர்வாகினாள்

விதி ஓர் விபரீத
விளையாட்டிங்கே

உயிரை மட்டும் வைத்துவிட்டு
இருவுள்ளத்தையும் உடைத்தது

ஈன்றோர் நலன்பேனும்
மங்கை என்ன செய்வாள்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேச முற்பட
உள்ளம் கதறி அழுவதை
என்னுள்ளம் உணருகிறதடி

விழிமுன் நீயிருக்க
விழிமூட மனமின்றி
நான் தவிக்கிறேன்

செவிகளில் உன்னோசை
கேட்ட படியிருக்க
உன்முகம் தேடி அலைகிறேன்
திசையெங்கும் என்னிலை மறந்து

காதலை ஏற்று
காதலனை ஏற்கா
நிலையில் நீ தவிக்க

உன்னிலையறிந்தேன்

உன் பெற்றோர் மனம் மாறாதா?
உன்மடி அடையும் வரம்
இப்பிறவியில் எனக்கிட்டாதா?
என தினம் தவிக்கிறேன்
உன் நினைவிலே என்னவளே

எழுதியவர் : சே.இனியன் (5-Aug-17, 9:31 am)
Tanglish : kaathalum valium
பார்வை : 139

மேலே