பொதுநலம்
எதுவாழ்வு சிறந்தவழி அறிவுமில்லை
ஏன்பிறந்தோம் இப்புவியில் தெளிவுமில்லை
சூதுவலை தன்னலத்தால் சிறப்புமில்லை
சொந்தங்கள் விலகிநின்றால் மகிழ்வுமில்லை
பொதுத்தொண்டு கருதிவிட்டால் மனம்மகிழும்
போக்கற்ற செயல்கள்கூட மறைந்தும்போகும்
இத்தரையில் வாழ்வதெல்லாம் சிலகாலம்
எப்போதும் மரணம்வரும் அதையுணர்வாய்
ஆக்கம்
அஷ்ரப் அலி