ஒன்று

ஒரு பிரளயம் அல்லால்
வேறென்ன வழி?

ஒவ்வொரு
சுவாசத்திலும் ஊழல்.

எல்லாச் சுரண்டலும்
அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.

எவனையும், எவனும்
எதுவும் சொல்லவிடாமல்
தடுப்பது எது?

அழிந்துபோவதில்
ஒன்றுபட்டார்கள்.

எழுதியவர் : கனவுதாசன் (13-Aug-17, 10:37 am)
பார்வை : 44

மேலே