இது தான் உலகம்

மனிதனே!
இந்த உலகத்தை நீ அறிவாயா?
அதன் தந்திரத்தைதான் உணர்வாயா?

இது ஒரு விசித்திரமான சொர்க்கம்
அதில் வாழ்வது அவ்வளவும் சிரமம்

என் அனுபவத்தால் கண்டறிந்த உலகத்தை கவிதையாய்
பதிவு செய்கிறேன்...
உங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!

இது தான் உலகம்!!!

யாரும் உனக்கு தராவிட்டாலும் உன்னிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்கும் உலகம் இது!!!

ஒருமுறை தவறு செய்துவிட்டால் ஒவ்வொரு முறையும் உன்னை குற்றவாளியாய் பார்க்கும்
உலகம் இது!!!

உனக்கு நீ உண்மையாய் இருக்கும் பட்சத்தில் உன்னை பொய்யாகவே பார்க்கும் உலகம் இது!!!

அடுத்தவன் காலைவாரிவிட்டு முன்னேறுபவனுடன் உன்னை ஒப்பிட்டு வேதனை படுத்தும்
உலகம் இது!!!

உன் சின்ன ஆசைகளை தகர்த்து, பேராசைகளை தூண்டிவிட்டு நகர்ந்து செல்லும் உலகம் இது!!!

உன் திறமையில் ஆராய்ச்சி செய்யுமே தவிர, வெளிப்படையாய் பாராட்ட தெரியாத உலகம் இது!!!

உன் வேதனையை ஸ்டேடஸில் போட்டால் அதற்கு லைக் போட்டு ஷேர் செய்யும் உலகம் இது!!!

பெண்கள் எல்லைமீறி பேச தடை, அதுவே ஆண்கள் எல்லைமீறி நடந்து கொண்டால் கண்டிக்ககூட வாயை திறக்காத உலகம் இது!!!

பிடித்திருக்கு என்று ஒரு ஆண் சொல்ல உரிமை உண்டு அதுவே பிடிக்கவில்லை என்று பெண் சொன்னால் ஏற்றுக்கொள்ளாத உலகம் இது!!!

உன் பலகீனத்தை பகிரங்கபடுத்தி பலமாய் சிரிக்க தெரிந்த உலகம் இது!!!

தன் தேவைகளை பூர்த்தி செய்ய ரகசியமாய் காலில் விழ தயங்காத உலகம் இது!!!

மனசாட்சிக்கு பயந்தவனாய் இருந்தால் 'பிழைக்க தெரியாதவன்' என்று விமர்சிக்கும் உலகம் இது!!!

உன் உழைப்பை திருடி தனது என அரங்கேற்றம் உலகம் இது!!!

அடுத்தவரை பற்றி யோசிக்காமல் சுயநலமே உருவான உலகம் இது!!!

விட்டு கொடுக்க தெரியாமல் தட்டிப்பறிக்க மட்டுமே தெரிந்த உலகம் இது!!!

இவ்வளவு தான் உலகம்...
இதை நீ புரிந்துக்கொண்டால்
கொஞ்சம் மனிதனாய் வாழலாம்...
இதை நீ அறிந்துக்கொண்டால்
கொஞ்சம் மனிதனாய் வாழ முயற்சிக்கலாம்...

#ஸ்ரீதேவி

#உனக்கான வாழ்க்கையில் அடுத்தவரிடம் இருப்பதை பார்த்து உன் நிம்மதியை இழந்துவிடாதே!!!#

எழுதியவர் : ஸ்ரீதேவி (16-Aug-17, 8:12 pm)
Tanglish : ithu thaan ulakam
பார்வை : 864

மேலே