பட்டதெல்லாம் போதுமென்று

பட்டதெல்லாம் போதுமென்று
பாடமாக கொள்வோமடா
போதுமுன்றன் ஆட்டமென்று
பொங்கி நாமும் எழுவோமடா
தொட்டதெல்லாம் பொன்தானென்று
துள்ளி நாங்கள் வருவோமடா
நீ இட்டதெல்லாம் மண்ணின் மீதே
சாமதியாகி போகுமேடா
எழில் கொஞ்சும் இறைவனிடம்
இறைஞ்சி கேக்கபோவதில்லை
உயிரில்லா கற்சிலையோ
உதவிடவும் போறதில்லை
உயிருள்ள பொற்சிலைகள்
கெட்டொழிந்து சென்றிடாமல்
கிளர்ந்தெழுந்து வந்திடுமே
சுட்டெரிக்கும் விழிகளுடன்
நாசமிடும் கயமைதனை
வேகுமந்த தீயிலிட

எழுதியவர் : சௌம்யா செல்வம் (18-Aug-17, 6:55 pm)
பார்வை : 1611

மேலே