விழித்திடு தோழா

விழித்திடு தோழா இன்றெ விழித்திடு
விழிகளின் ஓரம் கண்ணீர் துடைத்திடு
நாளையா விடியும்
இன்றே முடியும்
உழைப்பு ஒன்றையே என்றும் நம்பிடு
உனக்குள் இருக்கும் உன்னை எழுப்பிடு
எதிலும் உருதி கொண்டே உழைத்திடு
உன் செங்குருதியை இம்மண்ணிலே விதைத்திடு
அடிமை எனும் விழங்கை உடைத்திடு
அடங்காமல் புது புரட்சியை படைத்திடு
அனைவரும் சமம் எனும் கொள்கையை நிலைநிறுத்திடு
அதற்காகவேனும் உன் உயிரை கொடுத்திடு
உன் மறைவிலேனும் தோன்றட்டும் புது விடுயல்
அந்த விடியலிலே விழகுமோ அடிமை இருள்
அடிமை இருள் விழக விடுதலை வெயில் பரவ
புது மலராய் மலர்ந்திடுவாய் இவ்வுலகில்.

எழுதியவர் : கு.கார்த்திக். (22-Aug-17, 12:58 pm)
பார்வை : 590

மேலே