எனக்கே தெரியாமல்

எனக்கே தெரியாமல்
என் வீட்டுச் சுவரில்
முட்டி மோதிக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என் பூட்டிய அறையில்
விட்டு விட்டு சிரிக்கிறேன்

உனக்குத் தெரியாமல்
உன் காட்டுக் கூந்தலை அளந்து
நான் தான் கொஞ்சம் வெட்டி வந்தேன்

உனக்குத் தெரியாமல்
உன் பாட்டு இசையில் கலந்து
நான் தான் தாளம் ஆகிடுவேன்

உனக்குத் தெரியாமல்
உன் பூட்டு இதயத்தை உடைத்து
நான் தான் குடி புகுவேன்

உனக்குத் தெரியாமல்
என் ராட்டுக் கனவில் வந்து
நான் தான் முழுதாக கிரங்குறேன்

உனக்குத் தெரியாமல்
என் மாட்டுப் பெண்ணாக நீவர
நான் தான் பிராத்தனை செய்கிறேன்

எனக்கே தெரியாமல்
உன் நாட்டு கட்டுடலில் மயங்கி
நான் மஞ்சத்தில் ஓவியம் வரைகிறேன்

எனக்கே தெரியாமல்
என் வாட்டும் தனிமையில் காய்ந்து
உன்னை தான் துணையாக தேடுகிறேன்

என்னையும் அறியாமல்
நீ ஊட்டி குளிரில் நடுங்க
நான் வந்து கட்டிக் கொள்கிறேன்

என்னையும் அறியாமல்
உன் வேட்டு விழிகள் சுருங்க
நான் வந்து மூடி கொள்வேன்

உன்னையும் அறியாமல்
உன் சாற்றும் மவுனம் விழுங்க
நான் வந்து தவம் இருப்பேன்

உன்னையும் அறியாமல்
நீ நீட்டும் இதழில் விரும்ப
நான் தந்து இச் வைக்கிறேன்

என்னையும் அறியாமல்
உன்னையும் அறியாமல்
நிகழ்பவை புரியாமல்
நெகிழ்ந்த திரிகாலத்தில்

எழுதியவர் : யாழினி வளன் (25-Aug-17, 1:56 am)
Tanglish : enake theriyaamal
பார்வை : 1253

மேலே