அற்புதனே

அன்பில் விளைந்த ஐங்கரனே
ஆற்றலின் உறைவிடமே
இன்பம் தரும் கணபதியே
ஈரேழு பிறவிக்கும் துணைவனே
உலகம் சுற்றிய முதல்வனே
ஊக்கம் அளிப்பது உன் முகமே
எங்களை காக்கும் விநாயகனே
ஏற்றம் வந்திட அருள்வாயே
ஐம்புலன் ஒடுக்கும் நிர்மலனே
ஒருருவில் என்னை ஈர்த்தவனே
ஓங்கார வடிவு கொண்டவனே
ஔவையைக் காத்த அருள்முகனே
அஃகடி போக்கும் அற்புதனே

எழுதியவர் : லட்சுமி (25-Aug-17, 7:14 pm)
பார்வை : 450

மேலே