காதல் பயணம்

இணை பிரியா வாழ்க்கை
இதயம் கவர்ந்தவளோடு வாழ்ந்திட
இனம் புரியா கற்பனைகளும்
இன்னும் எட்டா ஏக்கங்களும்
மாயவன் மனதில் குடிகொள்ள
மனதில் நின்ற மாதுவை
மையல்கொள்வது தொட்டுவிடும் தூரமென
மனம் நினைத்தாலும்
இணை போல் காட்சி அளிக்கும்
இணை சேரா புகைவண்டி தடமாய்,
இன்றளவும் அவள் தொடாவானம்.................!!

காதல்பயண தடத்தில் தடம்புரளாமல்
கை கோர்த்து பழகும் நடை பேரானந்தம்
அனைவரும் எளிதில்
கால்பதிக்கும் காதல் தடத்தில்
தடுமாற்றம் வருமென்ற அச்சத்தில்
கால்தடம் பதிக்கவில்லையடி அன்பே........!!

நிலைகாற்றில் நிழலாடும் நின் படம்
நிலைத்து நிற்கும் ஒரு தடம்
கண நேரத்தில் தோன்றி மறைந்தாலும்
கண்ணுறக்கம் தொலைந்ததடி
ஆதியில் காதல் தோன்றியும் அதை
ஆழத்திலேயே புதைத்திருகிறேனடி.!

ஆயர் பாடி கண்ணனாய்,
கோபியரை கொஞ்சும் கோபலானாய்,
காதல்லீலை புரியும் மன்மதனாய்,
ஏகத்திற்கும் இல்லாமல் நின் கரம்பற்றும்
ஏகபத்தினி விரதனாய்- உன்
உள்ளம் கொள்ளைகொள்ளும்
கள்வனாய் காத்திருக்கிறேன் கண்ணே....!

ஆனாய் பிறந்தவனுக்கு
உன் அடி சேர ஆசை இருக்காதோ...?
காற்றினில் கலந்தவளே - என்
கற்பனையில் மிகுந்தவளே
அழகு மனகோலம் பூண்டு
அருகினில் வந்துவிடு அடியவனை
அள்ளி அணைத்து முத்தமிடு....!!

எழுதியவர் : சுதர்சன் (30-Aug-17, 4:07 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : kaadhal payanam
பார்வை : 432

மேலே