தாவணி பெண்ணாய்
பள்ளிக்கூடத்தில் ஒன்றாக
படிக்கும்போதெல்லாம்
பரீட்சைக்கு முன்பாக,
நீ படித்து எழுதிப்பார்த்த
அத்தனையும் திருத்தும்
பொறுப்பை நானே
செய்து வந்தேன் !
பருவம் வந்து
"தாவணி பெண்ணாய் " மாறியபின்பு
என்னை சுத்தமாக மறந்தே
போய் விட்டாய் !
சில பல திருத்தங்களை
உனக்கு நீயே செய்து கொள்வதில்
அத்தனை வருத்தம் எனக்கு !