இமைக்குள்ளே நீ
கண்ணிமைக்குள் வாழுகின்ற தேவியல்லவா நீ
என் காதல் காவியத்தில் தலைவியல்லவா
கண்ணிமைக்கும் போது மறைந்த வானவில்லே
உன் பிரிவால் வாடுவது என் ஜூவனல்லவா
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன் -நான்
துன்ப மழையில் தினமும் நனைகிறேன்
உள்ளத்தில் உன்னை வைத்து காதலிக்கிறேன்
உன் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்