கையாலாதகாதவர்கள்

தவறு செய்துவிடாயம்மா !
இத்தமிழ்நாட்டில் பிறந்து தவறு செய்துவிட்டாய் !
உன்னைச் சுற்றி பிணந்தின்னிகளும் , சாதி வெறி பிடித்த நாய்களும் , என்னைப் போல் கையாலாகாதவர்கள் மட்டுமே இருப்பதை அறியாமலே போராட துவங்கிவிட்டாய் !
உன் ரத்தம் குடித்தும் பசி ஆறாமல் இன்னும் பிணந்தின்னிகள் சுத்துகின்றன .
"தமிழராய் பிறத்தல் அதனினும் அரிது " , "மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்மம்மா " என்றான் ,
தமிழராய் பிறந்தாய் , அதுவும் மங்கையாய் பிறந்தாய் ஆனால் உன்னை வதக்கிச் சுருட்டி நெருப்பிலிட்டு குளிர் காய்ந்தோம் .
அதிலும் சாதி வாடை !
500,1000 வாங்கி ஒட்டு போட்டு தரகர்கள் ஆகி உன்னை விற்றோம் .
கேள்வி கேட்டால் "தேசத் துரோகி " , போராடினால் குண்டாஸ் .
கையாலாதகாதவர்கள் தான் நாங்கள் !
உனக்காக இந்நால்வரி மட்டுமே எழுத முடிந்தது, அவ்வளவே எங்கள் திராணி !
இத்தமிழ்நாட்டுப் பாவ பூமியில் பிறக்காமல் இருந்தால் பிழைத்திருப்பாயா ? அல்லது
மருத்துவராகும் கனவு காணாமல் இருந்தால் பிழைத்திருப்பாயா ? எப்படியாவது உன்னை உயிர்ப்பிக்க துடிக்கிறோம் , முடியவில்லை , ஆம் கையாலாகாதவர்கள் !
இன்னும் இரண்டொரு நாள் , உன் சாம்பல் வாடை மங்கியதும் நாங்கள் எங்கள் பனிக்குச் சென்றுவிடுவோம் .
இன்னோரு அனிதா சாகட்டும் , மீண்டும் வருகிறேன் இந்நால்வரியை பதிவிட !
அவ்வளவே எங்கள் திராணி !

எழுதியவர் : ம.பிரசாந்த் (4-Sep-17, 11:56 pm)
சேர்த்தது : பிரசாந்த் மனோ
பார்வை : 170

மேலே