வல்லினம் மெல்லினம் இடையே

நட்புக்கு ஆண்பெண் பேதமில்லை
அவர்களுக்குள் தயக்கம் இல்லாமல் பழகவும் இருபாலினரிடையிலும் சுமூகமாக நட்பு கொள்ளவும் மதிப்பு தரவும் சொல்லி தரவேண்டும்
ஆனால் பள்ளி கல்லூரிகளில் அவர்களை முழுவதுமாக பிரித்து வைத்து சொல்லித்தருகிறார்கள்
பிறகு எப்படி பார்த்ததும் காதல் தொட்டதும் காதல் என்று எண்ணங்கள் கொள்ளாமல் இருப்பர்
முதல் காதல் கடைசியல்ல என்ற எதாத்தத்தை உணர்த்தக்கூட அவர்களுக்கு ஆளில்லை
பெற்றோரோ காதலை கொடுங்குற்றம் போல் பேச அவர்களிடம் ஒளித்து வைக்க வேண்டிய கட்டாயம்
காதலில் எளிதில் தீரும் குழப்பங்களுக்கு மிக தவறான தீ்ர்வுகள் சிலர் எடுக்கவும் இதுதான் காரணம்
உங்கள் பிள்ளைகளோட முடிவுகளை சரியாய் அவர்களே எடுப்பார்கள் என்று நம்புங்கள்
எந்த பிரச்சனையிலும் உங்களை அணுகவும் மனசில் பட்டதை பயப்பதாமல் உங்களிடம் சொல்லவும் உந்துதல் கொடுங்கள்
இந்த தலைமுறையாவது சாதிமதம் போன்ற கட்டுகளை உடைக்கட்டும்
சொல்கிறார்கள் என்னமோ
காதலுக்கு வயதில்லை என்று
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
காதலிப்பவர்களோட வயது மனதுக்கு தடைபோடாது அதை நாம் வலுக்கட்டாயம்மாக செலுத்தவும் முடியாது
ஆனால் சரியான முடிவுகளைத்தேர்ந்தெடுக்க வரும் தலைமுறைக்கு உதவ நம்மால் இயலும்
நன்றி

எழுதியவர் : கருத்துச்சுந்தரி (5-Sep-17, 1:38 am)
சேர்த்தது : karthikka
பார்வை : 264

மேலே