நீ தூரத்தில் வருவதை

நீ தூரத்தில் வருவதை
பார்த்ததுமே என் இதயத்திற்கு
இறக்கை முளைத்து விடுகிறது !

உன் தோள்களில் அமர்ந்தவாறே
வந்து !
என் அருகே வந்து நீ
ஒற்றைப்பார்வை வீசி
சென்றவுடன் !

எனக்குள்ளே மீண்டும்
பத்திரமாய் வந்து அமர்ந்து
கொள்கிறது
என் இதயம் !

எழுதியவர் : முபா (5-Sep-17, 3:58 pm)
பார்வை : 1488

மேலே