காதல்

குடிக்கின்றேன் தினமும் உன்னை நினைத்து
மறக்க முடியாததால்

வளர்க்கின்றேன் தாடியை
எந்த வேண்டுதலும் இல்லாமல்

தேவதையே
உன் அருள் கிடைக்க வேண்டுமென்று !!

உலகையே உன் காலடியில்
வைக்க துடித்தேன்

நீ ஒரு வார்த்தை
சொல்வாய் என்று

மலர்கள் ஆட அலைகள் ஓட
நாம் எப்போது நடனமாட

காத்திருக்கிறேன் அந்த நாளுக்கு

எத்தனை பெண்கள் இருந்தாலும்
உன்னையே சுற்றுகிறேன்

மலர்களை சுற்றும் வண்டை போல

நீ தேனென்று அல்ல

என் உயிர் காக்கும் மருந்து என்பதால்

என் பார்வையோ கடிவாளம் போட்ட
குதிரை போல உன்னையே நோக்குகிறது

அத்தனை கிரக பெயர்ச்சிகளும்
என்னை நெருங்கி வர

வேண்டாம் என பிராதித்தேன் கடவுளிடம்

உன் பெயர்ச்சி ஒன்று மட்டும்
போதும் என்று

சித்திரையில் நித்திரையை தேடினேன்
உன் திரை விலக மறுக்கிறது

விடிந்தே விட்டது விடை தான் கிடைக்கவில்லை

உளி அடிக்க ஆசை தான்
சுத்தியலை தூக்கும் வலிமை கூட இல்லை

உன்னை பார்க்காத வரை

உளியோ அழுதது வலி தாங்காமல்
உன்னை பார்த்து நான் அடிக்கும் போது

பூத்து குலுங்கும் மலர்கள் எல்லாவற்றிக்கும்
உன் கூந்தலில் குடியேறும் ஆசையை போல

உன்னை கரம் பிடிக்கும் ஆண்களுக்கு மத்தியில்
மல்லிகை போல மணக்கிறேன்

உன் கூந்தலில் என்னை சூடு
வானவில்லையே உனக்கு மாலை ஆக்குகிறேன் !!!

எழுதியவர் : senthilprabhu (8-Sep-17, 9:49 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : kaadhal
பார்வை : 302

மேலே