ஓர் மெழுகுவர்த்தியை போல்

என் கட்செவி யை நீ பிளாக்
செய்யப்பட்டதாகவே இருக்கட்டும்
பரவா இல்லை தான் !

என்மேல் உன் கடைக்கண்
பார்வை படாமலே
இருக்கட்டும் பரவா இல்லை தான் !

என்னை கடந்து செல்லும்போது
யாரோ எவரோ என கண்டு கொள்ளாமல்
செல்வது கூட
பரவா இல்லைதான் !

என் கவிதைகள் ஒன்றைக்கூட நீ
வாசிக்காமலும் நேசிக்காமலும்
இருந்துவிட்டு போ
பரவா இல்லை தான் !

பாதை மாற்றி ,திசை மாற்றி வேறுபக்கம்
என் பார்வையில் படாமல் செல்லுவதும்கூட
பரவா இல்லைதான் !

அலைபேசி அழைப்புகள் அத்தனையும்
நீ நிராகரிப்பதும் கூட பரவா இல்லைதான் !

என்னை நிராகரிப்பதாய் நினைத்து
உன் ஒவ்வரு செயலிலும் என்னை இன்னும்தான்
மேலும் அதிகமாய் காதலித்துக்கொண்டிருக்கிறாய்
என்பது நான் உணராமல் இல்லை !

எனக்கு உயிர் வதை தருவது உனக்கு
பிடித்து போய் இருக்கிறது !

நீ தரும் அத்தனை வலிகளையும் ஏற்றுக்கொண்டு
ஒவ்வொரு நொடியும் உன்னையே நினைத்து நினைத்து
உருகிக்கொண்டிருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது !

ஓர் மெழுகுவர்த்தியை போல் !

எழுதியவர் : முபா (9-Sep-17, 10:29 am)
பார்வை : 362

மேலே