நினைவுகள் நிறைவுகள்

காகம் என் தலையில் எச்சமிட்டுவிட்டது
உடனே எனக்கு ஞானம் பிறந்தது
ஓ...காகம் போதிமரத்தின்
பழம் தின்றிருக்குமோ
****** ******* ******** ********
அகிம்சை பற்றி
எனக்கு நினைவு வந்தது
பார்த்தால் நான்
காந்தி சாலையில் நடந்துக்கொண்டிருந்தேன்
****** ******* ******** ********
நன்றிகெட்ட மகன்களைவிட
நாய்கள் மேலடா என்ற பாடல்
வரிகள் என் செவியில் ஒலித்தது
பார்த்தால் நான்
முதியோர் இல்லத்தை கடந்து
போய்கொண்டிருந்தேன்
****** ******* ******** ********
நீ எங்கிருந்து வருகிறாய்
என்று கேட்டார்கள் சற்று
யோசித்துப்பார்த்து சொன்னேன்
என் தாயின் கருவறை என்று...
****** ******* ******** ********
நம் தேசியக்கொடியை
பார்த்தேன் எனக்கு எம்மதமும்
சம்மதம் என்ற ஒருமைப்பாடு
நினைவுக்கு வந்தது
செங்காவி - இந்து
பச்சை - இஸ்லாமியம்
வெள்ளை - கிருஸ்த்துவம்
****** ******* ******** ********
ஐயா பிச்சை போடுங்கள்
என்றான் ஒரு
யாசகன் என்னிடம்
எனக்கு என் தாய் தந்தையின்
நினைவு வந்தது
இந்த பிறப்பே அவர்கள்
போட்ட பிச்சைதான் என்று
****** ******* ******** ********
நான் தவறி கீழேவிழுந்து அம்மா...என்றேன்
என்ன மகனே என்று
இரண்டு குரல்கள் கேட்டது
திரும்பிப்பார்தேன்
ஒருவள் என்னை பெற்றத்தாய்
மற்றொருவள் என் தமிழ்த்தாய்
****** ******* ******** ********

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Sep-17, 2:33 pm)
பார்வை : 857

மேலே