குழந்தை
குறு குறு பார்வைகளில்
கொள்ளை போகும் இதயம்!!
சின்ன சின்ன அசைவுகளும்
சித்திர பல்லாக்கு!!
பொம்மையின் கையில்
இன்னொரு பொம்மை!!
விழிகளோடு கதை பேச
கவிகளும் விளையாடும்
உன் கரங்களில்!!
பார்வைகளுக்கு பலவித
அர்த்தம்!!!
செயல்களில் தினம் தினம்
முன்னேற்றம்!!
இவை யாவும் புலப்படும்
சிற்பியின் கண்களுக்கு மட்டும்!!
வளரும் வரை
வாழை குருத்து!!
வளர்ந்த பின்னும்
வாழையடி வாழை!!!
உன்னை காணாமல்
கண் தூங்காது
உன்னை பெற்றவளுக்கு!!
நானும் வரம் கேட்கிறேன்
உன்னை போல மாற!!!!