துணை நீயே

இடது பதந்தூக்கி யின்ப முடனே
நடனஞ் செயுங்கண நாதா! - இடர்களைய
ஆடுமயில் மீதேறி ஆனந்த மாய்வந்து
பாடுமென்பா வைக்கேட்டுப் பார்.

துணைநீயே! வாழ்வினில் தும்பிக்கை யானே!
அணைத்தென்னைக் காத்திடுவாய்! அன்பாய் - இணையடி
பற்றி உளமுருகிப் பாடிப் பணிந்திடுவேன்
வற்றா வருளை வழங்கு.

களிற்று முகத்தன் கடம்பனின் அண்ணன்
எளியனாய் வந்தே எலிமேல் - தெளிவும்
அருள்வான்; சதுர்த்தியில் ஐங்கரத் தானை
விரும்பிய வண்ணமே வேண்டு.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Sep-17, 8:59 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 64

மேலே