என் கவிதைப்பயணம் உன்னைப்பற்றியே தொடர்கிறது
பட்டாம்பூச்சி உன்மீது அமர்ந்து
இருக்கும்போதே என் இதயம் முடிவு
எடுத்து விட்டது !
நீதான் என் கவிதைப்பெண் என்று !
சின்னஞ்சிறு குழந்தைகளோடு
சறுக்கல் விளையாட்டும்,
கண்ணாம்பூச்சியும் விளையாடியதை
பார்த்தபோதே என் இதயம் முடிவு
எடுத்து விட்டது
நீதான் என் காதல் இளவரசி என்று !
உன்னை சுற்றி சுற்றி வட்டமிட்டு வந்த
எந்த வாலிபனையும் ஏறெடுத்து பார்க்காமல்
நீ உன் விளையாட்டில் லயித்து இருந்தபோதே
என் இதயம் முடிவு எடுத்து விட்டது
நீதான் என் காதலுக்கான பெண் என்று !
காற்று வந்து வேண்டும் என்றேதான்
உன் பின்னல் இடாத கூந்தலை கலைத்துக்கொண்டே
இருந்தது !
அக்கணம் என் மனம் அதில் கலைந்ததை
உன்னிடம் சொல்ல எத்தனிக்கும்போதே
கவிதையாய் என்றேனும் மொத்தமாக சொல்லி கொள்ளலாம்
என இதயம் முடிவு எடுத்தது !
சிற்றிடையா ! பெருந்தனமா ! கட்டழகியா !
கார்மேக கூந்தல் அழகியா ! எத்தனை அழகு
உன்னிடம் கொட்டிக்கிடக்குது !
எல்லாவற்றையும் சொல்லவேண்டும்
ஆனாலும் இப்பொழுது ரசித்துக்கொண்டிருக்க
இருவிழிகள் போதவில்லையே எனும் வருத்தம்தான்
மேலோங்கி !
இருவிழி படைத்த இறைவனை சபித்துக்கொண்டும்
இதயம் தேடிய தேவதையை எனக்கு காட்டிய இறைவனை
வாழ்த்திக்கொண்டும் !
என் கவிதைப்பயணம் உன்னைப்பற்றியே தொடர்கிறது !