முதல் முறையாக

உன் உதடுகள்
உச்சரித்த போதுதான்
என் பெயர்
இத்தனை அழகா
என வியந்து போகிறேன் ...
முதல் முறையாக
ரசிக்க தொடங்குகிறேன்
என் பெயரை .....

உன் விழிகளை
சந்தித்த பின்புதான்
என் முகம்
இத்தனை அழகாய்த்
தெரியத் தொடங்குகிறது ...
முதல் முறையாக
அடிக்கடி கண்ணாடி
பக்கம் சென்று
சிரிக்க தொடங்குகிறேன் !

உன் அருகாமையில்
உன் விழியில்
என் உருவம்
கண்ட அந்த
முதல் நொடியில்தான்
இரண்டாம் முறை
நான் பூபெய்தேன்...
முதல் முறையாக
பெண்மையின் உச்சம்
உணரத் தொடங்கினேன் !

உன் விழிகளை
என்னை அறியாமல்
என் விழிகள்
தேடித் தோற்று
மெல்லத் தவித்து
துடிப்புகள் மறந்து
நின்ற இருவிழிகளும்
இதயத்தை சாய்த்தன...
முதல் முறையாக
என்னை இழந்ததை
உணரத் தொடங்கினேன் !

நீ இல்லாத அந்த
வகுப்பறையின் வெறுமை
என்னை அழுத்தத்தொடங்கி
உள்ளே அழத்தொடங்குகிறேன் ....
முதல் முறையாக
என் வகுப்பறை
என் காதலைச்
சொல்லாமல் சொன்ன
தாஜ் மகாலகியது !

நீ விடுப்பு எடுத்து
வராத அந்த ஒரு நாள்
என் காதலின்
முதல் நரகம்...
நான் எரிந்து
முதல் முறையாக
காதலின் வலியை
உணரத் தொடங்கினேன் !

அந்த ஒருநாள்
நான் நானாக இல்லாமல்
அந்த நாள் மடிந்து
மறுநாள் வகுப்பறைக்குள்
நான் புதிதாக நுழைகிறேன்
உன்னைக் காண
கொஞ்சம் குழப்பத்தோடும்
கொஞ்சம் காதலோடும் ..!

நன்றி !

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (16-Sep-17, 1:36 am)
Tanglish : muthal muraiyaga
பார்வை : 412

மேலே