முருகும் தமிழும்

பன்னிரு சீர்விருத்தம்

தமிழர்மீ தாரியரும் துருக்கருமே படையேதும் எடுக்கவில்லை எனச்சொல்
தெற்க்கிலேமூ வேந்தரேக்கோ லோச்சிவந்த அற்புதங்காண் மற்றவராண் டதுண்டாசொல்
தமிழர்தொ ழுதகடவுள் சிவமுடனே தமிழ்க்கடவுள் முருகையும்தான் சொன்னார்கேள்
தென்நாடு டைசிவமே போற்றிஎன்ற தெள்ளியவாக் கறியாமக் களாநீவீர்
அமிழ்தினும்தீஞ் சுவையாம்நம் தமிழ்என்றால் முருகும்சி வமுமன்றோ அறிவீர்நீர்
நிமிர்தலற்றார் கைவிட்டார் நிமிர்ந்ததமி ழன்சிவன்மு ருகைக்கைதொழு தனரேகேள்
தமிழில்தான் முருகென்றால் அமிழ்தென்றும் அழகென்றும் இளமையென்றே சொல்லுவாராம்
தமிழென்றால் முருகன்மு ருகென்றால் தமிழாம்என் றறியாத தமிழனாநீ



--- ராஜ பழம் நீ (17.9.2017)

எழுதியவர் : பழனி ராஜன் (17-Sep-17, 8:13 am)
பார்வை : 216

மேலே